Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சோ்ந்தவா் ராஜா. 2018-ல் ஊரில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவா் அடித்து கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் ராஜாவை கடந்த 3 ஆண்டுகளாக போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பினார்.
இதையடுத்து ராமநாதபுரம் போலீஸார் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயனம் செய்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா். ராஜாவின் பாஸ்போர்ட்டை கணினியில் பரிசோதித்தபோது, அவர் போலீஸாரால் தேடப்படும் நபர் என்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜாவை அவர்கள் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT