Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை : சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சரத்குமார், அவரது மனைவிராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ரேடியன்ஸ் மீடியா என்ற படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.2 கோடியை கடனாக பெற்றுள்ளது.

அதை திருப்பித் தரும் விதமாக, மேஜிக் ப்ரேம்ஸ் சார்பில் ரூ.75 லட்சத்துக்கான 2 காசோலைகளும், சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள5 காசோலைகளும் வழங்கப்பட்டன.

அனைத்து காசோலைகளும் வங்கியில் பணமின்றி திரும்பியதால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பின்னர் இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில்வழக்கறிஞர்கள் அபுடுகுமார், ஜான்சன் யுவராஜ் வாதிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றுகூறப்பட்டது. இதையொட்டி, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர். கரோனா காரணமாக ராதிகா தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ராதிகாவுக்கு பிடிவாரன்ட்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என்.அலிசியா, மொத்தம் உள்ள 7 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தனித்தனியாக தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட காசோலை மோசடிக்காக ரூ.2.8 கோடி, சரத்குமார் சார்பில் வழங்கப்பட்ட காசோலைக்காக ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.3.30 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் மீதான தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்த நீதிபதி அலிசியா, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ராதிகாவுக்கு பிடிவாரன்ட் பிறப் பித்து உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறும்போது, ‘‘இந்ததீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன். ராதிகாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கூறி மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளோம். அதை நீதிபதிஏற்றுக்கொண்டுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x