Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த நான்கு பேர் கைது :

கோவை கணபதி மாநகரில் ஒருபேக்கரி முன்பு, அரசியல் கட்சியைச் சேர்ந்த இருவர் வாக்காளர் களுக்கு பணம் விநியோகிப்பதாக, கோவை வடக்கு தொகுதி பறக் கும்படை அலுவலர்களுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. பறக்கும்படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தியதில், கணபதிமாநகர் முதலாவது பிளாக்கைச் சேர்ந்த ரவிபாலு(46), 3-வதுபிளாக்கை சேர்ந்த வெள்ளிங்கிரி (59) ஆகியோர் தங்களது ஆதரவுகட்சிக்கு வாக்களிக்க, வாக்காளர் களுக்கு பணம் விநியோகிப்பது உறுதியானது. அவர்களிடம் இருந்து ரூ.73 ஆயிரம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் ரவிபாலு, வெள்ளிங்கிரி ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல, சவுரிபாளையம் தேர் வீதியில் ஒரு மண்டபம் முன்பு, அரசியல் கட்சியைச் சேர்ந்த இருவர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக சிங்காநல்லூர் தொகுதி பறக்கும்படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும்படைக் குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் சவுரிபாளையத்தைச் சேர்ந்தவினோத் அமல் கிறிஸ்டோபர்(35), வெள்ளிங்கிரி ஆகியோர், தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போட பணம் விநியோகிப்பது உறுதியானது. அவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பறக்கும்படை அலுவலர்கள் அளித்தபுகாரின் பேரில், வினோத் அமல் கிறிஸ்டோபர், வெள்ளிங்கிரி ஆகியோரை பீளமேடு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x