Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

அமைச்சர்கள் தொகுதியில் 80 சதவீதத்தைக் கடந்த வாக்குப்பதிவு :

ஈரோடு: ஈரோட்டில் இரு அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் உட்பட 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தைக் கடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 76.91 சதவீதம் வாக்குப்பதிவானது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 66.24 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 69.36 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 75. 26 சதவீதமும், பவானிசாகரில் 77.37 சதவீதமும் வாக்குப்பதிவானது.

அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டியிடும் பவானி தொகுதியில் மாவட்டத்தில் அதிக பட்சமாக 83.50 சதவீத வாக்குகளும், அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபி தொகுதியில் 82.52 சதவீத வாக்குகளும் பதிவாயின. அதேபோல், பெருந்துறை தொகுதியில் 82.60 சதவீத வாக்குகளும், அந்தியூரில் 79.69 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை கணிக்க முடிவதாக தெரிவித்துள்ள அரசியல் கட்சியினர், எல்லா கட்சியினரும் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வர வைக்கும் வகையில், பணியாற்றியுள்ளது தெரியவருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x