Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

அண்ணா நகரில் : ஏப்.11-ல் உதயமாகும் வேலம்மாள் போதி அகாடமி :

சென்னை

ஐஐடி-ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பொன்னேரி வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் மிகச்சிறந்த பயிற்சி அளித்து தமிழக மாணவர்களை முதன்மை மதிப்பெண் பெற வைத்து சாதனை படைத்து வருகிறது.

வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் ஓர் அங்கமான வேலம்மாள் போதி அகாடமி, சென்னை, அண்ணா நகரில் வரும் ஏப்ரல் 11-ம்தேதி தொடங்கப்படுகிறது. ஆற்றல் நிறைந்த பயிற்சி ஆசிரியர்களுடன், மாணவர்களின் போட்டித் தேர்வு கனவுகளை நனவாக்க திறன்மிகு பயிற்சிக் களமாக இந்நிறுவனம் அமைய உள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களின் லட்சியப் பயணம் தடைபடாமல் நேரடி வகுப்புகளுடன், காணொலி வகுப்புகள் மூலமும் மாணவர்களுக்கு பயிற்சி கிடைக்க VB Live என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதி மாணவர்களின் லட்சியக் கனவுகளுக்கு செயல்வடிவம் தரும் பயிற்சிக்களமாக இம்மையம் அமையும் என்று அதன் இயக்குநர் எம்.வி.எம்.சசிக்குமார் தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x