Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

திமுகவினரை ஆபாசமாக பேசியதாக - அமைச்சர் பெஞ்சமின் மீது : இரு பிரிவுகளின்கீழ் வழக்கு :

அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு தமிழக அமைச்சரும், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளருமான பெஞ்சமின், தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அங்கிருந்த சில வாக்காளர்களை பெஞ்சமின் தரப்பு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அங்கிருந்த திமுகவினர்,பெஞ்சமினை கண்டித்துள்ளனர். அப்போது பெஞ்சமின் திமுகவினரை ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து முகப்பேர் மேற்கு பள்ளிக்கூடம் முதல் தெருவைச் சேர்ந்த நவராஜ் (36) என்பவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் போலீஸார், பெஞ்சமின் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x