Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

நடிகை குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு :

கட்சி கொடியுடன் வாக்குபதிவு மையத்துக்கு காரில் சென்று தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பு மீது பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்பு வாக்களித்தார். அப்போது, அவர் வாக்கு மையத்துக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக கொடி கட்டிய காரில் சென்றுள்ளார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகை குஷ்பு மீது ஏற்கெனவே கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x