Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள கே.சென்னம் பட்டியைச் சேர்ந்த சங்கையா மகன் திருவேட்டை அய்யனார் (28). இவர், நேற்று முன்தினம் எழுமலையிலுள்ள இந்து நாடார் தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் என்பதை மொபைல்போன் கேமராவில் புகைப்படமாக எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதி வேற்றம் செய்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது திருமங்கலம் தொகுதிக்கான பறக்கும்படை அலுவலர் வாசுகி, கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவேட்டை அய் யனாரை காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT