Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
நாமக்கல்: குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து வருகிறது.
குமாரபாளையம் வழியாக சேலம்-கோவை புறவழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் கத்தேரி பகுதியில் பிரிவு சாலை உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் நின்று செல்லும். இந்நிலையில், பிரிவு பகுதியில் உள்ள சோடியம் விளக்குகள் மற்றும் போக்குவரத்து சிக்னல் என எதுவும் வேலை செய்யவில்லை. இதனால், அப்பகுதியில் இரவுநேரத்தில் இருள் சூழ்ந்து இருட்டாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தவிர, இச்சாலையை கடக்க வாகனங்கள் திரும்பும்போது விபத்து அபாயமும் நிலவி வருகிறது. இதை தடுக்க மின் விளக்குகளை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT