Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

மருத்துவப் பணியாளர்களுக்கு தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி :

சேலம்: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு, தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி சேலம் தனியார் கல்லூரியில் நடந்தது.

தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, மேற்கு மண்டல துணை இயக்குநர் சத்தியநாராயணன் அறிவுறுத்தலின் படி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் வேலு (சேலம் மாவட்டம்), அண்ணாதுரை (நாமக்கல் மாவட்டம்) ஆகியோர் தலைமையில் சேலம் தனியார் கல்லூரியில் நடந்த தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியில் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில், தீயணைப்பு கருவிகள் கையாளுதல், பராமரித்தல், அவசர காலங்களில் வெளியேறும் முறைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையங்களில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களும் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x