Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

கன்னியாகுமரி தொகுதியில் வாக்குப்பதிவு அதிகம் : கிள்ளியூரில் குறைந்த சதவீதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 15,71,651 வாக்காளர்களில் 10,81,258 பேர் வாக்களித்திருந்தனர். இது 68.85 சதவீத வாக்குப்பதிவு.

கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் உள்ள 2,92,943 வாக்காளர்களில் 2,20,717 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.34 சதவீத வாக்குப்பதிவு. மாவட்டத்தில் வாக்குகள்அதிகமாக இங்குதான் பதிவாகியுள்ளன. ஆண்கள் 1,07,962 பேரும்,பெண்கள் 1,12,728 பேரும், இதரர் 27 பேரும் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் குறைவாக வாக்குகள்பதிவான கிள்ளியூர் தொகுதியில்மொத்தம் உள்ள 2,53,199 வாக்காளர்களில் 1,66,721 பேர் வாக்களித்துள்ளனர். இது 65.85 சதவீத வாக்குப்பதிவு. ஆண்கள் 81,637 பேரும், பெண்கள்85,084 பேரும் வாக்களித்துள்ளனர்.

நாகர்கோவில் தொகுதியில் மொத்தம் உள்ள 2,70,402 வாக்காளர்களில் 1,80,183 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.64 சதவீத வாக்குப் பதிவு.ஆண்கள் 90,249 பேரும், பெண்கள்89,934 பேரும் வாக்களித்துள்ளனர். குளச்சல் தொகுதியில் மொத்தம் 2,68,218 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் 1,80,916 பேர் வாக்களித்துள்ளனர். இது 67.45 சதவீத வாக்குப்பதிவு. ஆண்களில் 89,309 பேரும், பெண்களில் 91,607 பேரும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். விளவங்கோடு தொகுதியில் உள்ள 2,47,853 வாக்காளர்களில் 1,65,822 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.09 சதவீத வாக்குப்பதிவு. ஆண்களில் 81,429 பேரும், பெண்களில் 84,392 பேரும், இதரர் ஒருவரும்வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பத்மநாபபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,39,036 வாக்காளர்களில் 1,66,899 பேர் வாக்களித்துள்ளனர். இது69.82 சதவீத வாக்குப்பதிவு. ஆண் வாக்காளர்கள் 82,182 பேரும், பெண் வாக்காளர்கள் 84,715 பேரும், இதரர் இருவரும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x