Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

3 வயது பெண் குழந்தைக்கு பேஸ்மேக்கர் கருவி : காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள், 3 வயது பெண் குழந்தைக்கு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி சாதனைப் படைத்துள்ளனர்.

இந்தக் குழந்தைக்கு ஓராண்டுக்கு முன் மற்றொரு மருத்துவமனையில் TOF என்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அக்குழந்தைக்கு முழுமையான இதய அடைப்பு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தைகளுக்கான எபிகார்டியல் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டும், முழுபலனில்லை.

இதையடுத்து, திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையின் இதயவியல் அறுவைச் சிகிச்சை நிபுணரும், மின் இயற்பியலாளருமான ஜோசப், குழந்தைகளுக்கான இதயவியல் மருத்துவர் மணிராம், இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை நிபுணர் கவுதம், இதயம் சார்ந்த மயக்கவியல் நிபுணர் முர்ஷித் ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, பெரியவர்களுக்கு பொருத்தப்படும் எபிகார்டியல் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி மாநகரில் இந்த வகையான சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். குழந்தையின் எளிமையான பின்புலம், நிதி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த சிக்கலான சிகிச்சை செயல்முறை கட்டணமின்றி இலவசமாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x