Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

வீட்டின் சுவரை உடைத்து 4 பவுன் நகை, ரொக்கம் திருட்டு :

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட நான்குசாலை சந்திப்புப் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் நடராஜன்(40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான இவர், கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். நடராஜன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறச் சுவரை உடைத்து, வீட்டிலிருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x