Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தற்போது தினமும் 80 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 9,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தலைமையில், சித்த மருத்துவப் பணியாளர்கள் அஜிதா, தேன்மொழி உள்ளிட்டோர், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT