Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

கணினி அறிவியல் பாடத்திட்டம் - வடிவமைக்க நிபுணர் குழு :

தமிழக பள்ளிக்கல்வியில் 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது கணினி அறிவியல் தொடர்பான பாடங்கள் கற்றுதரப் படுகின்றன. இதர வகுப்புகளுக்கு கணினி பயிற்சி தொடர்பான எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட்டது. தேர்தல் காரண மாக தாமதம் ஏற்பட்டுவந்த திட்டப்பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில் (2021-22) இருந்து 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்றுதரப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டம் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பாடத்திட்டத்தை வடிவமைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) தலைமையில் பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. எதிர்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தை தயாரிக்க முடிவாகியுள்ளது.

இணையதள முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு வழிமுறைகளும் பாடங்களில் இடம்பெறும். மே மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x