Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

பறக்கும்படை சோதனையில் ரூ.4.17 கோடி பறிமுதல் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதையொட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல்பறக்கும்படை குழு, நிலையானகண்காணிப்பு குழு அலுவலர்களால் வாகன சோதனை நடத்தப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் 4 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 189 ரூபாய்உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் அதிகபட்சமாக நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 1 கோடியே 76 லட்சத்து 11 ஆயிரத்து 778 ரூபாய் கைப்பற்றப்பட்டது. கன்னியாகுமரி தொகுதியில் ரூ.26,13,045, குளச்சல் தொகுதியில் ரூ.76,90,395, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.39,12,265, விளவங்கோடு தொகுதியில் ரூ.50,66,214, கிள்ளியூர் தொகுதியில் ரூ.48,46,492 பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x