Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் (52). இவர், குடியாத்தம் அடுத்த செக்குமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நாகராஜ் மகள் தீபா (19) என்பவர் நேற்று முன்தினம் காலை மோடிகுப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக நிலை தடுமாறி விழுந்தார். அப்போது, அவ் வழியாக வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT