Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளிக்க இருப்பதாக ஆம்பூர் தொகுதியின் அமமுக கூட்டணியில் இடம் பிடித்த எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் உமர் பாரூக் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் திமுக, அதிமுகவினர் வாக் காளர்களுக்கு பணம் வழங்கியது போன்ற பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர்.
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் அவர்களுடைய கட்சியின் சின்னம் பொறித்த கைப்பைகளை வாக்குச் சாவடிகளுக்குள்ளேயே கொண்டு சென்று வாக்காளர்கள் கண்களில் படும்படியாக வைத்திருந்தனர்.
மேலும், பொது இடத்திலேயே வாக்காளர்களுக்கு பணமும் கொடுத்தார்கள்.
திமுக, அதிமுகவினர் தேர்தல்விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.
மேலும். தேர்தல் விதிமுறை மீறல் காரணமாக ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT