Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, மந்தைவெளி சைதன்யா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை 11.30 மணியளவில் வாக்களித்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில் வழக்கத்தைவிட வாக்குப்பதிவு அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆயிரம் விளக்கு தொகுதியில் குடியிருப்புகள் மாற்றத்தால் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது வருத்தத்துக்குரியது.
திமுகவினர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்வதை கண்டோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். திமுக வஞ்சகத்தால் வெற்றிபெற விரும்புகிறது. நடிகர் விஜய் வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி உள்ளது. இதனால் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதற்காக மிதிவண்டியில் அவர் பயணித்திருக்கலாம். எனவே, இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT