Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

சிறப்பு மாதிரி வாக்குச்சாவடியில் : ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மக்கள் :

பெரும்புதூர்: சிறப்பான அலங்காரங்கள் மற்றும் சிவப்பு கம்பள வரவேற்புடன் கூடிய சிறப்பு மாதிரி வாக்குச் சாவடிகள், பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர் ஒன்றியத்தில், மாடம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வண்ண பலூன்கள், வாழை மரங்கள் கட்டி வைத்தும் வரவேற்பு தோரணங்கள் வைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டு வாக்குச்சாவடியின் ஒவ்வொரு இடத்திலும் வண்ண பலூன்கள் கட்டப்பட்டு தரத்துடன் அமைக்கப்பட்டது. இங்கு மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x