Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

விழுப்புரம் அருகே பிடாகத்தில் - பதற்றமான வாக்குச்சாவடியில் அதிமுக, திமுகவினர் மோதல் : துணை ராணுவப் படையினர் துப்பாக்கியை காட்டி விரட்டினர்

விழுப்புரம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியில் ஒன்றானபிடாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்களிக்க வருவோரிடம் தாங்கள் சார்ந்துள்ள கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதனால்இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு ஓய்ந் துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கூடியிருந்த கூட்டத்தை கலைக்க துணைநிலை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி, மிரட்டி விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினர். பின்னர் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

செஞ்சி தொகுதிக்குட்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள 3 வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து பொதுமக்கள் தீவிரமாக வாக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். வாக்காளர்கள் தங்களது பைக்குகளை 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தி விட்டு வர வேண்டுமென்ற தேர்தல் விதிமுறையை பொருட்படுத்தாமல் முதியவர்களை பைக்கில் கூட்டி வந்தனர். அப்போது வெளிமாநில போலீஸார் வாகனங்களை லத்தியால் தட்டியதோடு வாகன கண்ணாடிகளை உடைத்ததால் ஆவேசமடைந்த வாக்காளர்கள் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ‘நாங்கள் வாக்களிக்க மாட்டோம்’ என்றும் கூறினர்.

இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. சமாதானமடைந்து அவர்கள் வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x