Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

முதலியார்பேட்டையில் திமுகவினர் சாலை மறியல் :

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்வாக்குப்பதிவு நேற்று நடைபெற் றது. அப்போது முதலியார்பேட்டை பெருமாள் கோயில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்துரு என்பவர் வயதானவர்கள் சிலரை வாக்களிக்க அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாக்குச் சாவடி அருகே அமர்ந்திருந்த அதிமுகவினர், சந்துரு அடிக் கடி வயதானவர்களை அழைத்து வந்து வாக்களித்ததைப் பார்த்து விவரம் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்துரு தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையறிந்த முதலியார் பேட்டை தொகுதி திமுகவினர், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற னர். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி - கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்துபோலீஸார் மறியலில் ஈடு பட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x