Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மழலையர் பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 3 வாக்குச்சாவடிகளிலும் 2,386 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப் பட்டிருந்தது. இங்கு பந்தல் அமைத்து வாழைமரம், தென்னை, மாவிலை தோரணம் கட்டி, சிவப்பு கம்பளம் விரித்து இருந்தனர். வாக்காளர்களை பன்னீர் தெளித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT