Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

ஒட்டன்சத்திரத்தில் : திமுக, அதிமுகவினர் மோதல் :

ஒட்டன்சத்திரம் நகரில் கிறிஸ்துவ மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று மாலை சிலர் வாக்களிக்க வந்தனர். அவர்கள் அதிமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களிடம் திமுகவினர் ஆதரவு கோரினர். அப்போது அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மோதல் ஏற்பட்டதில் இருதரப்பிலும் 12 பேர் காயமடைந்தனர். போலீஸார் அங்கிருந்த இரு தரப்பினரையும் வெளியேற்றினர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரைக் கண்டித்து திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. அசோகன், ஏடிஎஸ்பி வெள்ளைச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்த ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரைக் கைது செய்ய வேண்டுமென ஏடிஎஸ்பி வெள்ளைச்சாமியிடம் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x