Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
திருச்சி: தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள், வாக்களிக்கும் தங்கள் உரிமையை, ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருச்சி கிராப்பட்டி தூய சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த எஸ்.சுவாதி கூறும்போது, ‘‘வாக்களிக்கும் எனது உரிமையை, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
திருச்சி தென்னூர் அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவ மாணவி பி. வர்ஷினி கூறும்போது, ‘‘முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதால் கடந்த இரு தினங்களாகவே மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். காலையிலேயே எழுந்து, தயாராகி பெற்றோரை அழைத்துக் கொண்டு, வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT