Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: காரைக்கால் ஆட்சியர் அறிவிப்பு :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, அவரது மனைவியும், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளருமான நிஹாரிகா பட் ஆகியோர் நேற்று மதியம் வாக்களித்தனர்.

பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது. ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் விதிமீறல்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x