Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இரா.முத்தரசன் :

திருவாரூர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட வேளூர் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கினாலும், அதற்கு முன்னதாகவே பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். மக்களின் இந்த மிகுந்த ஆர்வம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிரதிபலிப்பதாக உள்ளது.

திமுக கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x