Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் தீவிர ஏற்பாடு :

திருநெல்வேலி மாவட்டத்தில்தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. விஷ்ணு உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. விஷ்ணு வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசுபொறியியல் கல்லூரியில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணிக்கைஅறை, வாக்கு எண்ணிக்கைக்குப்பின் இயந்திரங்களை வைப்பதற்கான அறை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ்பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி நேற்று காலையில் தனது குலதெய்வ கோயிலான கரும்புலி சாஸ்தா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர்,சங்கரநாராயண சுவாமி கோயில் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று, தனது வாக்கை பதிவு செய்தார்.

தென்காசி மஞ்சம்மாள் அரசுமகளிர் மேல் நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச் சாவடிக்கு தென்காசிமாவட்ட ஆட்சியரும், மாவட்டதேர்தல் அலுவலருமான சமீரன்சென்று, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x