Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

ஆம்பூர் அருகே - காவலாளி அடித்துக்கொலை? : காவல் துறையினர் விசாரணை

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மனைவியை பார்க்கச்சென்ற காவலாளி அடித்துக்கொலை செய்யப் பட்டதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிக் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (51). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு உணவ கத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கருத்துவேறுபாடு காரண மாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியை பார்க்க கோவிந்தராஜ் சென்றார். அதன் பிறகு அவர் ஆம்பூர் திரும்ப வில்லை. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கோவிந்தராஜ் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அவ ரது மனைவியின் உறவினர்கள் கோவிந்தராஜனின் உடலை ஆம்பூர் கென்னடிக்குப்பம் பகுதிக்கு கொண்டு வந்தனர். பிறகு, இறுதி சடங்கு செய்யாமல் மயானப் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, சந்தேகமடைந்த கோவிந்தராஜியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்தபோது முகம் சிதைந்த நிலையிலும், கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். பின்னர், மனைவியைபார்க்கச் சென்ற கோவிந்தராஜன் அடித்துக் கொலை செய்யப் பட்டிருப்பதாகக் கூறி அவரது உடலை மயானப்பகுதிக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x