Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
தேர்தலை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
300-க்கும் மேற்பட்ட புகார்கள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சட்டவிரோதமாக பணம், பொருட்கள் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கடந்த மார்ச் 1-ம் தேதி திறக்கப்பட்டது. இதில், சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. அவற்றில் நம்பத்தகுந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.77 கோடி ரொக்கம், ரூ.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலைவிட ரூ.65 கோடியும், 2019 மக்களவை தேர்தலைவிட ரூ.19 கோடியும் அதிகம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT