Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

விடுதிகளில் வெளியூர் நபர்கள் உள்ளனரா? போலீஸார் தீவிர சோதனை :

வெளியூர் நபர்கள் தங்கியிருப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீஸார், தமிழக சிறப்பு காவல் படையினர் 8 ஆயிரம் பேர், மத்திய துணை ராணுவ படையினர் 23 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையினர் 14 ஆயிரம் பேர், வெளிமாநில போலீஸார் 18 ஆயிரம் பேர் என 1 லட்சத்து 58,263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவும், கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீஸார்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தொகுதியைவிட்டு வெளியேறும்படி தேர்தல்ஆணையமும் காவல் துறையினரும்அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று காலை முதல் விடுதிகளில் சோதனை நடத்தும் பணியை போலீஸார் செய்து வருகின்றனர். வெளியூர்நபர்கள் தங்கி இருந்தால், அவர்கள்எதற்காக வந்துள்ளனர், அதற்கானஆவணங்கள், ஆதாரங்கள் இருக்கிறதா என்றும் விசாரணை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இந்தசோதனை நடந்து வருகிறது.

இதேபோல வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடைசி நேர பணப் பட்டுவாடாவைதடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது வருகிறார்களா, வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் இருக்கிறதா என உள்ளூர் போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, கோவையில் குவாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று2,955 விடுதிகள், 3,862 திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டது. 67 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 48 பேரும் சிக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x