Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
நியூ டெஹ்ரி: உத்தராகண்ட் மாநிலம், டெஹ்ரி கார்வால் மாவட்டத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் கடந்த 3-ம் தேதி வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றனர். துப்பாக்கியுடன் சென்ற ராஜீவ் (22) என்பவர் கால் தடுக்கி விழுந்துள்ளார். அப்போது துப்பாக்கி தானாக இயங்கி சந்தோஷ் மீது குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த மற்றவர்கள் அச்சமடைந்தனர். ராஜீவ் துப்பாக்கியுடன் ஓடிவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த சோபன், பங்கஜ், அர்ஜுன் ஆகிய 3 பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இவா ஆஷிஷ் வாஸ்தவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT