Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் சர்தார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துல்சா பாய். 118 வயது மூதாட்டியான இவர், கிம்லசா பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு நேற்று வந்து கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டார்.
இதையடுத்து, அங்கிருந்து வெளியே வந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “பெருந்தொற்று காலத்தில் நம்மையும், நமது சுற்றத்தாரையும் காக்க வேண்டியது நமது கடமை. ஆதலால், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதேபோல், மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கவலை இல்லாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், மக்களில் ஒருபகுதியினர் இடையே கரோனா தடுப்பூசி குறித்த அச்சமும், சந்தேகமும் நிலவி வருகிறது. இந்நிலையில், 118 வயது மூதாட்டி ஒருவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிகழ்வு, நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT