Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தொகுதிகளின் காப்பு அறைகளில் இருந்து, வாக்குச்சாவ டிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் கடந்த மாத இறுதி யில் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு இன்று நடப்பதை யொட்டி, காப்பு அறைகளில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று, அந்தந்ததொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்பார்வையில், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியை எடுத்து லாரிகள் மூலமாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு மொத்தம் 6,885 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 5,894 வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT