Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

சென்னையில் இன்று வாக்களித்துவிட்டு கோவை திரும்புகிறார் கமல்ஹாசன் :

கோவை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்து, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். மேலும் மநீம வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், காலை வெளியூர் சென்றால் மாலை கோவை வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக அவர் போட்டியிடும் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட தொகுதிகளில் பொதுமக்களை தொடர்ச்சியாக சந்தித்தார். அவருக்கு ஆதரவாக மகள் அக் ஷரா ஹாசன், நடிகை சுகாசினி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 7 மணியுடன் கோவையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட கமல்ஹாசன், அன்று இரவே சென்னை புறப்பட்டு சென்றார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, “கமல்ஹாசன் அவரது சொந்த தொகுதியான மயிலாப்பூரில் வாக்களிக்க சென்றுள்ளார். வாக்களித்துவிட்டு உடனடியாக கோவை திரும்பி, வாக்குச்சாவடிகளை பார்வையிட உள்ளார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x