Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
வாக்களிக்க ஏதுவாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை தொழிலக பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு முதலாவது இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (6-ம் தேதி ) நடக்க உள்ளது. இன்றைய தினம் கோவை மாவட்டம், வடக்கு தாலுகா, தெற்கு தாலுகா, அன்னூர் தாலுகா, மேட்டுப்பாளையம் தாலுகா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் (நிரந்தர தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்), தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அந்த தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுப்பு வழங்காத தொழிற்சாலைகள் மீது குற்ற நடவடிக்கை தொடரப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT