Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் உட்பட 7,908 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு பணிக்காக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர காவல்துறையினர் 1,320 பேர், ஆயுதப்படை காவலர்கள் 956 பேர், சிறப்புக் காவலர்கள் 255 பேர், தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் 260 பேர், கர்நாடக மாநில ஊர்க்காவல் படையினர் 500 பேர், தெலங்கானா மாநில பயிற்சிக் காவலர்கள் 300 பேர், துணை ராணுவத்தினர் 411 பேர், முன்னாள் காவலர்கள் 47 பேர் என 4,049 பேர் மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டக் காவல்துறையின் காவலர்கள் 917 பேர், ஆயுதப் படை காவலர்கள் 600 பேர், சிறப்புக் காவலர்கள் 180 பேர், தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் 347 பேர், கர்நாடக மாநில ஊர்க்காவல் படையினர் 750 பேர், தெலங்கானா மாநில ஊர்க்காவல் படையினர் 200 பேர், துணை ராணுவத்தினர் 540 பேர், முன்னாள் காவலர்கள் 325 பேர் என 3,859 பேர் புறநகர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாநகர் மற்றும் மாவட்டக் காவல்துறையில் சேர்த்து மொத்தம் 7,908 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT