Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

குமாரபாளையம் தாலுகாவில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மனு :

குமாரபாளையம் தாலுகாவில தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலரிடம், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பள்ளிபாளையம் டிவிஎஸ்மேடு பகுதியைச் சேர்ந்த எம்.சபரிநாதன் என்பவர் மனு அளித்துள்ளர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம்:

குமாரபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக, திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான தாகும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்கும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு குமாரபாளையம் தாலுகாவில் தேர்லை தள்ளி வைக்க வேண்டும். பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x