Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

வாக்குப்பதிவு மையங்களுக்கு - துணை ராணுவப் படையினர் விரைவு :

வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த துணை ராணுவப் படையினர், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை போலீஸாருடன் இணைந்து பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்புகளை நடத்தி வந்தனர். கொடி அணிவகுப்புகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, துணை ராணுவப் படையினர் நேற்று மாலை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த பாதுகாப்பு பணிக்காக வட மாநிலங்களில் இருந்து துணை ராணுவப்படையினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பேருந்துகள் மூலம் வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையில் மட்டும் 18 கம்பெனி துணை ராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சென்னை போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இறுதியாக நேற்று சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், மெரினாவில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலையில், சென்னையில் உள்ள அனைத்து வாக்குப் பதிவு மையங்களுக்கும் அவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்பாக பதற்றம் நிறைந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x