Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

வாக்குக்கு ஆயிரம் ரூபாய் தொடங்கி 2 ஆயிரம் வரை - புதுச்சேரியில் பல தொகுதிகளில் பண விநியோகம் மும்முரம் : வெளிப்படையாக நடந்தும் தேர்தல் துறை கண்டுகொள்ளவில்லை

தேர்தலையொட்டி கடைசி கட்டத்தில் பணவிநியோகம் வெளிப்படையாக புதுச்சேரியில் பல தொகுதிகளில் மும்முர மாக நடந்தது. தேர்தல்துறை அதை தடுக்காமல் செயல்பட்டதாக பலரும் குற்றஞ் சாட்டுகின்றனர். அதே வேளையில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வெளிப்படையாக யாரும் புகார் தெரி விக்கவும் தயங்குகின்றனர்.

புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி முழுக்க இம்முறை தேர்தலுக்கு பணம் விநியோகம் இல்லாமல் இருக்க கடும் நடவடிக்கைகளை தேர்தல்துறை எடுத்துள்ளதாக தெரிவித்தது. உச்சக் கட்டமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக் கப்பட்டது.

தேர்தல் பரப்புரை நிறைவடைந்த சூழலில் நேற்று பண விநியோகம் பல தொகு திகளில் வெளிப்படையாக நடந்தது. குறிப்பாக ஒவ்வொரு பகுதியில் உள்ள கடைகள், முக்கியமானோர் கூடும் இடங் கள் தொடங்கி பல வகைகளில் பண விநியோகத்துக்கான வழிகளை தேர்வு செய்தனர்.

இதுபற்றி அரசியல் கட்சி வட்டாரங் களில் விசாரித்த போது, "பண விநியோகம் எப்போதையும் விட துரிதமாக நடக்கிறது. அடையாள அட்டை தந்து அதன் மூலம் பணம் தருகின்றனர். பூத் வாரியாக பிரிக்கப்பட்டு, பணம் பட்டுவாடா நடக்கிறது.

சில தொகுதிகளில் முக்கிய வேட் பாளர்கள் மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் ஆயிரக்கணக்கில் பணத்தை விநியோகிப்பதும் நடக்கிறது.

சிறிய ஊரான புதுச்சேரியில் தொகுதி வாரியாக பணிபுரியும் தேர்தல் துறையில் பறக்கும் படையில் உள்ள பலரும் இதை நன்கு அறிந்தும் கண்டுக்கொள்வதில்லை. முக்கியமாக பண விநியோகத்தை பற்றி கட்சிக்காரர்களே வாயை திறப்பதில்லை. வெளிப்படையாக புகாரும் தருவதில்லை.

இம்முறை, பெரும்பாலான தொகுதிக ளில் ஆயிரம் ரூபாய் தொடங்கி 2 ஆயிரம்வரை தருகிறார்கள். குறிப்பிட்ட சில தொகு திகளில் ரூ. 3 ஆயிரம் வரை வாக்குக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. ‘வென்ற பிறகு மேலும் பரிசு’ என்று உறுதியும் வாக்காளர்களுக்கு தரப்பட்டுள்ளது. டோக்கன் முறையும் இருக்கிறது." என்று குறிப்பிட்டனர்.

சமூக ஆர்வலர்களிடம் விசாரித்த போது, "சிறிய ஊரான புதுச்சேரியில் கட்சியினர் பலரும் இணைந்துதான் பணியாற்றுகின்றனர். அதுபோல் தேர்தல்பணியில் ஈடுபடுவோரும் உள்ளனர். அரசுபணியில் இருந்தாலும் கட்சி சார்பில்லா மல் இருப்போர் மிக குறைவுதான். அதனால் தேர்தல் பணி, பறக்கும்படை பணி, காவல் பணி என எப்பணியில் இருந்தாலும் பணவிநியோக விதிமீறல் தொடர்பாகபெரிதாக யாரும் வெளிப்படையாக கண்டுக்கொள்ளாத போக்கே இருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் பணபட்டு வாடா என்று குறிப்பிட்டு குறைந்த தொகையும், வழக்கு மட்டுமே பதிவாகிறது. கடந்த முறை தேர்தல் துறையால் பதிவான வழக்குகளின் நிலை இப்போது என்ன என்று நினைத்துப் பார்த்தாலே உண்மை நிலை தெரியும். முக்கியமாக தேர்தல் நடத்தை விதிமீறல் "என்கின்றனர் கோபத்துடன்.

போலீஸார் விசாரணை

இதற்கிடையே, பரவலாக வரும் தகவல்களின் அடிப்படையில் போலீ ஸார் குறிப்பிட்ட சில பகுதிகளில் அணி வகுப்புகளை நடத்தினர். ஆங்காங்கே சாதாரணமாக நின்றோரிடம் பண விநியோகம் நடைபெறுகிறதா என விசாரித்து சென்றனர்.

வழக்கமாக தேர்தல் நடைபெறும் முதல் நாள் தலைமை தேர்தல் அதிகாரிஅனைத்து மாநிலங்களிலும் செய்தியாளர் களை சந்தித்த சூழலில் புதுச்சேரியில் மட்டும் செய்தியாளர் சந்திப்பை நடத்த வில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை இரு முறை மட்டுமே தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் செய்தி யாளர்களைச் சந்தித்திருப்பது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில் வாக்காளர்களின் செல் போன் எண்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய எஸ்எம்எஸில், "சட்டப்பேரவை தேர்தலில் எந்த தூண்டுதலுக்கும் அடிபணியாமல் கண்ணியத்துடன் வாக்களிக்க தேர்தல் துறை அன்புடன் வேண்டுகிறது" என்ற குறுஞ்செய்தி குறிப்பிடத் தக்கது.

பண விநியோகம் பல தொகு திகளில் வெளிப்படையாக நடந்தது. பெரும்பாலான தொகுதிகளில் ஆயிரம் ரூபாய் தொடங்கி 2 ஆயிரம் வரை தருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x