Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அனைவரும் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் நேற்று விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT