Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

2 மாத பெண் சிசு உயிரிழப்பு :

தருமபுரி

தருமபுரி இலக்கியம்பட்டி கோல்டன் தெருவைச் சேர்ந்த வண்ணம் தீட்டும் தொழிலாளி செல்வம் (30). இவரது மனைவி ரூபினி (25). இவர்களுக்கு 7ஆண்டு களுக்கு முன்னர் திருமணமானது. கடந்த 2 மாதத்துக்கு முன்னர் ரூபினிக்கு பெண் குழந்தை பிறந்தது. கருவுற்றபோதே பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் ரூபினி தங்கி இருந்தார். இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்னர் குழந்தைக்கு பால் புகட்டியபோது திடீரென குழந்தைக்கு புரை ஏறியதாகக் கூறி நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைக்கு மூச்சுத் திணறல் குறையாததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்து வர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x