Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் திமுகவினர் 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கடந்த 2-ம் தேதி பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் முல்லை
வேந்தன் பேசும்போது அப்
பகுதியைச் சேர்ந்த திமுக-வினர் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதனால்,. பிரச்சாரம் பாதியில் நின்றது.இதேபோல, பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் சண்முகம் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை பேசக் கூடாது என திமுக-வைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி, பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த ரங்கநாதன் (42), சாம்ராஜ் (44), தியாகராஜன் (40), சிவன் (42), ரவி (53) உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT