Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

- எஸ்.ஐ. உட்பட 4 காவலர்கள் மீது திமுகவினர் தாக்குதல் : வாணியம்பாடி அருகே ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பில் வில்வநாதன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட, வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் திமுக நிர்வாகிகள் ரவி, பெருமாள், செல்வராஜ் ஆகியோர், தங்களது கட்சி உறுப்பினர்களுடன் வீடு, வீடாகச் சென்று, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான 4 காவலர்கள் அங்கு சென்று, ரவியிடமிருந்த ரூ.52,500-ஐ பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.

அப்போது, மற்றொரு தெருவில் பணம் விநியோகம் செய்துகொண்டிருந்த பெருமாள், செல்வராஜ் உள்ளிட்டோர் அங்கு சென்று, எஸ்.ஐ. கமலக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கிவிட்டு, காவல் துறையினர் கைப்பற்றிய ரூ.52,500-ஐப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் காயமடைந்த காவல் துறையினர் 4-பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில், திமுக நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டார். மேலும், தப்பியோடிய செல்வராஜ், பெருமாள் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x