Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
புதுச்சேரி அரசு சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.1 கட்டணத்தில் மாணவர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா பரவல் சூழலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளதால், மாணவர்களுக்கான பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காரைக்கால் அருகே கீழகாசாக்குடி சிவன் கோயில் திடலில் 3 பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதில், நேற்று திடீரென ஒரு பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், இந்தத் தீ அருகிலிருந்த மற்றொரு பேருந்துக்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோட்டுச்சேரி போலீஸாரும், கல்வித் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT