Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

ஊழல் குறித்த விவரங்களுடன் பேச வேண்டும்: கமலக்கண்ணன் :

முன்னாள் அமைச்சரும், திருநள் ளாறு தொகுதி வேட்பாளருமான ஆர்.கமலக்கண்ணன் கூறியது:

திருநள்ளாறில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பிரச்சாரம் செய்தபோது, நாராயணசாமி அரசை ஊழல் அரசு என கூறியுள்ளார். எந்தத் துறையில், எவ்வளவு ஊழல் என்ற விவரங்களுடன் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக ஊழல் என ஜெ.பி.நட்டா போன்றவர்கள் பேசக்கூடாது. இந்த வெற்றுப் பேச்சு மக்களிடம் எடுபடாது.

யூனியன் பிரதேச சட்டத்தின்படி நிதிச் செயலர், தலைமைச் செயலர், துணை நிலை ஆளுநர் ஒப்புதலின்றி, முதல்வரால் எந்த நிதியையும் செலவிட முடியாது. விசாரணை அமைப்புகள் மத்திய அரசிடம் உள்ள நிலையில், 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், தற்போது வந்து ஏன் பேச வேண்டும்?

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானத்துக்கான நிலத்தை புதுச்சேரி அரசு அளித் தது.

ஆனால், மத்திய பொதுப் பணித் துறையால் நடைபெறக்கூடிய கட்டுமானப் பணிகளை வேண்டுமென்றே பாஜக அரசு தாமதித்துவிட்டு, தற்போது மாநில அரசு ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது அபத்தம். பெருநிறுவனங்களை வளர்க்க நிதியை வாரி இறைக்கும் பாஜக, சிறு நிறுவனங்கள் நலிவதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை மூடி மறைக்கும் விதத்திலேயே ஜெ.பி.நட்டாவின் பேச்சு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x