Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

கள்ளிக்குடி பகுதியில் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இறுதிக்கட்ட பிரச்சாரம் :

அகத்தாபட்டியில் பிரச்சாரம் செய்த திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை

மதுரை திருமங்கலம் தொகுதிக் குட்பட்ட அகத்தாபட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: எங்களது எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது நில அப கரிப்பு, கொள்ளை, கொலை குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் 14,523 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறினார். தனக்கு முதல்வர் பதவி ராசி இல்லை என்பதால் மகனை முதல்வராக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 2 ஜி அலைவரிசையில் மிகப்பெரிய ஊழல் செய்த ஆ.ராசா, முதல் வரின் தாயாரைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார். இவரைப் போன்ற வர்களுக்கு நிரந்தர தண்டனையை மக்கள் வழங்க வேண்டும்.

கவனக்குறைவால் தீய சக்திக்கு வழிவிட்டுவிடாதீர்கள். காட்டுத் தீ எப்படி வீட்டை, நாட்டை அழிக்குமோ அது போன்று திமுகவை கிள்ளி எறியாவிட்டால், நாட்டுக்கு ஆபத்து என்று பேசினார்.

ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்தைப் பேட்டையில் இருந்து ராஜாஜி சிலை வரை நடந்து சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x