Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

ஈரோட்டில் : ரூ.12 கோடிக்கு மது விற்பனை :

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.4 கோடி வரை மது விற்பனையாகி வருகிறது. பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும்.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீண்ட வரிசையில் நின்று மது குடிப்பவர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். மூன்று நாள் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் ரூ.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யானதாக டாஸ்மாக் அலுவலர் கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x