Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

கரோனா தடுப்பு வழிமுறைகளை வாக்காளர்கள் பின்பற்ற வலியுறுத்தல் :

கிருஷ்ணகிரி

வாக்காளர்கள் அனைவரும் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை (6-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களும் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி வழங்கப்படும். மேலும், வாக்காளருக்கு ஒரு கையுறை வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட கையுறையை அணிந்து வாக்குப்பதிவு செய்தபின்னர் பயன்படுத்தப்பட்ட கையுறையை அங்கு வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x