Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கீழே கிடந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் மீட்டனர்.
நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் காவல் நிலைய ஏட்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜாகொல்ல அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கிடந்தது. ரோந்து போலீஸார் அதை மீட்டனர்.
விசாரணையில், உரிமம் இல்லாத அந்த துப்பாக்கியை யாரோ வீசிச் சென்றது தெரிந்தது. மேலும், இதுதொடர்பாக போலீ ஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT